×

ஆனி வெள்ளியை முன்னிட்டு பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

பெரியகுளம், ஜூன் 25: பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பெரியகுளத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் ேகாயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இப்பூஜையில் தோஷங்கள் நீங்கிட, மாங்கல்ய பாக்கியம் கைகூட, மழலை பேறு பெற்றிட அனைத்து இல்லங்களிலும் லட்சுமி கடாச்சம் பொங்கிட, நாட்டிலும் வீட்டிலும் என்றென்றும் மகிழ்ச்சி பொங்கிட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மேலும் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் பெரியகுளம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளான தாமரைக்குளம், வடுகபட்டி, லட்சுமிபுரம், எ.புதுப்பட்டி தேவதானப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு ஹரே ராம ஹரே கிருஷ்ண நாமம் முழங்க சாமி தரிசனம் செய்து பிரசாதங்களை பெற்றுச் சென்றனர்.

The post ஆனி வெள்ளியை முன்னிட்டு பெரியகுளம் வரதராஜ பெருமாள் கோயிலில் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Thiruvilakku ,Puja ,Periyakulam Varadaraja Perumal Temple ,Ani Velli ,Periyakulam ,Thiruvilakku Pooja ,Ani Friday ,Pooja ,Periyakulam Varadaraja ,Perumal ,Temple ,
× RELATED அரியலூர் பெரியநாயகி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை